*நாட்டின் 72 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களால் தயாரித்த தேசியக்கொடியை தவிர்க்கும் பொருட்டு மண்ணூர் மலை, அரசுப்பள்ளி மாணவர்கள் மக்கும் பொருட்களைக்கொண்டு தேசியக்கொடி தயாரித்தனர்.*
*சேலம் மாவட்டம்,பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், மண்ணூர் மலை,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் முருகன்,ஆசிரியர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் அறிவியல் ஆசிரியர் ஜோசப் ராஜ் மக்காத பொருளான செய்தித்தாளை குச்சியாக செய்து அதில் காகிதத்திலான தேசியக்கொடியை ஒட்டி முழுவதும் மக்கும் வகையிலான தேசியக்கொடியை செய்து காண்பித்தார்.
உடன் மாணவர்களும் தங்களுக்கு சுதந்திர தினத்திற்கு தேவையான மக்கும் வகையான தேசியக்கொடியை தயாரித்தனர்*
No comments:
Post a Comment